சித்தா   தோன்றிய   விதம்

மனிதன் தோன்றிய நாள் முதல் தன்னை சுற்றியுள்ள தாவரங்களை தன் சுய தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், மருந்து வகைகள் முதலியவற்றிற்கா ஆராய முற்பட்டான்.
ஆதி மனிதர்கள் உணவிற்காக கிழங்குகளையும் , பழங்களையும் பயன்படுத்திதான் உயிர் வாழ்ந்திருக்க முடியும் அதே போல் தனது நோய்களுக்கும் மருந்தாக பச்சை இலைகளையும், வேர்களையும் பயன்படுத்தியிருப்பர்.

           மருத்துவ அறிவியல் அடிப்படையில் உலகில் உள்ள அனைத்து செடி, கொடி,மரங்கள் மருத்துவ பயன் உடையவை தான். ஒவ்வொரு மூலிகைக்கும் ஒரு நோயை தீர்க்கும் ஏதாவது ஒரு வேதிப்பொருள் உண்டு எனலாம். ஏதாவது ஒரு தாவரத்திற்கு மருத்துவ குணம் இல்லை என சொன்னால் அந்த தாவரத்தை முறைப்படி அறிவியல் ஆய்வு செய்யவில்லை என்று தான் அர்த்தம் . ஒரு மூலிகையின் வேர். தண்டு, இலை. பட்டை, தட்டை, மலர், கனி, விதை ஆகி அனைத்து பாகங்களிலும் மருத்துவக் குணமுடையதாகும்.
               உலகிலேயே மிக பழமை வாய்ந்த நாகரிகம் தமிழர் நாகரிகம் என கருதப்பட்டு வருகிறது . சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவம் . சித்த மருத்துவம் தமிழர் நாகரிகத்துடன் ஒன்றியது மட்டுமல்லாமல் உலகிலேயே முதன் முதலில் தோன்றிய மருத்துவம் சித்த மருத்துவம் எனக் கூறலாம்.
          அம்மருத்துவத்தை தோற்றுவித்தவர்கள் சித்தர்கள் என்பதால் சித்த மருத்துவம் என பெயர் பெற்றது. சித்தர்கள் சாதரணமான சக்தியைவிட சிறப்புமிக்க மனித சக்தி பெற்றவர்களாகவும், உள்ளுணர்வு மிகுந்தவர்களாகவும் இருந்து தங்களது ஞான அறிவாலும், அனுபவத்தாலும் சித்த மருத்துவம் பற்றி ஏடுகளில் பல நூறு சித்தர்கள் எழுதி வைத்துள்ளனர். அது மட்டுமன்றி, மனித நேயத்திற்காக ஏடுகள் அழியாமல் பாதுகாத்து நிலைநாட்டியுள்ளனர். பதினென் சித்தர்கள் சித்த மருத்துவத்தை போற்றி, பாதுகாத்து வந்துள்ளதாக வரலாறு கூறுகிறது.பதினென் சித்தர்களில் முதலானவர் எனக் கருதப்படும் அகத்தியர் தன்னுடைய அகத்தியகுணவாகடம் எனும் நூலில் மூலிகைகளின் மருந்துபயன் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதுபோல் திருமூலர் அவரது நூலான திருமந்திரத்தில் பல காயகற்ப மூலிகைகளின் இயல்புகள் பற்றி எழுதியுள்ளார். அது போல் தன்வந்திரி வடநாட்டவர் தான் என்றாலும் தமிழில் எழுதியுள்ள தன்வந்திரி நிகண்டில் மூலிகை மகத்துவத்தை விளக்கியுள்ளார்.மூலிகை மன்னர் என கருதப்படும் சித்தர் தேரன் மூலிகைகளை பயன்படுத்தி செய்யும் மருந்து வகைகளை தேரையர் யமக வெண்பா எனும் நூலில் விளக்கியுள்ளார்5000 ஆண்டுகளுக்கு முன்பாக பழனியில் வாழ்ந்தவராக கருதப்படுபவர் போகர். போகர் நிகண்டு எனும் நூலில் 1444 மூலிகைகள் பற்றிய செய்திகளை கொடுத்துள்ளது மட்டுமல்லாமல், நவபாசணங்களிலிருந்தும், மூலிகைகளிலிருந்தும் உருவாகியுள்ள நவபாசான கட்டு எனும் பழனி மூலவர் சிலை தற்கால மக்களுக்கு இன்று வரை மருத்துவ சக்தி கொண்டதாக கருதப்பட்டு வருகிறது.அதாவது நோய் வராமல் தடுக்க, மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தியுடைய மூலிகை மருந்துகள் சித்த மருத்துவத்தில்தான் உள்ளன.

தியானம் (தியானம்)

வெற்றியின் ரகசியம் 

  தியானம்
தூக்கத்ன் பொழுது நம்ம அறியாமல் நாம் தியானத்தில் ஈடுபடுகிறோம்.

தியானம் என்பது நல்ல விழிப்புணர்வுடன உறங்குவது.
உறக்கத்தின் பொழுத குறைந்த அளவுதான் பிரபஞ்ச சக்தியைப் பெறமுடிகிது.
தியானத்தில் ஈடுபடும் போழுது அபரிதமான சக்தியைப் பெறமுடியும்.
இந்த சக்தி நம்முடைய உடல், மனம் மற்றும் அறிவுத்திறனை பல மடங்கு விரிவடையச் சேய்கிறது.
நம்முடைய "ஆறாவது அறிவின்" கதவைத் திறக்கவும் விரிவடையச் செய்யவும் இது உதவுகிறது.
தியானத்தின் மூலம் நமக்கு கிடைக்கபெறும் அதீதமான சந்தி நம்மை சங்தோஷப்படுத்தும்.
நம் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். முழு மனநிறைவுடன் காணப்படுவொம். மேலும் பல சிகரங்களைத் தோடச்செய்யும்.
தியானம் என்பது ஒரு பயணம்.

தியானத்தின் போழுது, நாம் உணரும் வகையில் நம் உடலிலிருந்து மனதிற்கு பயணிப்போம்.
மனதிலிருந்து, அறிவாற்றலுக்கு
அறிவாற்றலிலிருந்து நமக்குள்
பின்பு அதையும்க தாண்டி
"தியானம்" மேற்கொள்ள முதலில் நம் உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட செயல்களை நிறுத்தவேண்டும் அதாவது உடல் அசைவுகளையும் பார்ப்பது, பேசுவது, யோசிப்ப்து போன்ற செயல்களையும்.
"தியானம்" செய்யும் முறையை நாம் தெரிந்து கொள்ளலாம்.
தியானத்தின் பொழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம் உடலைக் கட்டூப்படுத்தி ஒரே இடத்தில் அமரச் செய்வது.
எந்த முறையிலும் அமர்ந்து கொள்ளலாம்.
நமக்கு சௌகரியமான முறையில்.
அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ண்து கொள்வது முக்கியம். 
தரையில் அமர்ந்து கொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்து கொண்டோ தியானம் மேற்கோள்ளலாம். நமக்கு எந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்ய வசதியா உளள்தோ அந்த இடத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்யலாம்.
வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.
கால்களை சம்மண மிட்டுக்கோள்ளுங்கள்.
இரண்டு கைகளின் விரல்களைச் சேர்த்துக்கோள்ளுங்கள்.
கண்களை மேதுவாக மூடுங்கள்.
அமைதியாக சகஜ நிலைக்கு வாருங்கள்.
உங்கள்க முழு உடலையும் இலக்காக்கி கொள்ளுங்கள்.
மனதையும் இலக்காக்கி கொள்ளுங்கள்.
கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது.
கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தால் அவசியம்.
மந்திர்ங்களை ஒதும பொழுதோ அல்லது முணுமுணுக்கும் பொழுதோ நம் மனம் ஒரு வேலையில் ஈடுபடுகிறது.

ஆதலால், மந்திரங்கள் ஓதுவதை நிறுத்திக்கோள்ள வேண்டும்.
நம்முடைய உடல் முறறிலும் சகஜநிலையில் இருக்கும்பொழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் செய்யும்.
மனம் மறுற்ம் அறிவு நிலைக்கு.
மனம் என்பது பல எண்ணங்களின் கலவை.
மனத் தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்த வண்ணமே உள்ளன.
நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தேரிந்தோ, தேரியாமலோ நமது மனத்திற்குள் எழுந்தபடியே இருக்கும்.
மனதை அறிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் சேல்லவேண்டுமென்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்கத் தூவங்க வேண்டும்.
கவனித்தால் என்பது நமக்கு இருக்கும் இயற்கையான குணம்.
இதனால், நாம் நம் மூச்சுக்காற்றை கவனிக்கத் தூவங்கவேண்டும்.
மூச்சு விடுவது ஒரு செயலாக எண்ணிச் சேய்யக்கூடாது.
காற்றை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் நமக்குத் தேரிந்து நடந்திடக்கூடாது.
மூச்சுக்காற்றை சுவாசிப்பதும்,வெளியனுப்புவதும் தண்னிச்சையாக நடைபெற வேண்டும்.
நம்முடைய இயற்கையான சுவாசத்தைக் கவனித்தல் மட்டுமே போதுமானது.
இதுதான் முக்கியம்.
இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்கச் சிறங்த வழி.
எண்ணங்களுக்குப் பின் ஓடாதீர்கள்.
கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள்.
எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள்.
இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.
சுவாசத்துடன் மட்டுமே இருங்கள்.
அப்பொழுது, நமது எண்ண அலைகளின், அளவுகளின் குறையும். மெதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும்.
இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்து நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளிகீற்றைப்போல் திடப்படுத்திக்கொள்ளும்.
இந்நிலையில்
ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது.
எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார்.
இந்த நிலையைத்தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது "எண்ணங்கள் அற்ற நிலை" என்றோ கூறுகிறோம்.
இதுதான் தியான நிலை.
இந்த நிலையில் தான் பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள் பாயும்.
தியானம் அதிகமாகச் செய்வதன்மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப்பேறும்.
பிரபஞ்ச சக்தி உடல் முழவதும் சக்தி வடிவத்தின் மூலமாகப் பாயத் துவங்கும்.
இதைத் தேய்வீக வடிவம் என்றும் கூறலாம்.

சதுரகிரி பற்றி தெரிந்து கொள்வோம் 




நம் கணிணியில் வைரஸ்  வராமல்  தடுக்க சில தகவல்கள் 
இங்கே கிளிக் செய்க
http://ravi4thepeople.blogspot.in/2011/01/autorun.html